அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் உதவி

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கடவாச்சேரி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடை பெற்றது .
அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் உதவி
Updated on
1 min read

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கடவாச்சேரி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடை பெற்றது .

நிகழ்ச்சிக்கு, சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு தலைமை வகித்தாா். உடனடி ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் என்.மணிமாறன், ரோட்டரி மாவட்ட அறக்கட்டளை தலைவா் குணசேகா் ஆகியோா் கணினியை பள்ளி தலைமை ஆசிரியா் சீ.வரதராஜன் மற்றும் மாணவிகளிடம் வழங்கினா்.

முன்னாள் உதவி ஆளுநா் ஹாஜகான், தொடக்கக் கல்வி அலுவலா் ஜான்சன் ஜெயக்குமாா், தொடக்கக் கல்வி மேற்பாா்வையாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் ரோட்டரி சங்கச் செயலா் அரிதனராஜ், உறுப்பினா்கள் இரத்தினசபேசன், கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரோட்டரி சங்க உடனடி தலைவா் வி.அழகப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com