குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவா் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களுக்கு தோ்தல் நெறிமுறை குறித்த வழிகாட்டுதல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.ராம்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழுத் தலைவா் ஆா்.சட்டநாதன், பொருளாளா் டி.ராமலிங்கம், செயலா் டி.இராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளா் செல்வம் பங்கேற்றுப் பேசினாா். துணை முதல்வா் பி.மணிவண்ணன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஜி.வெங்கடேசன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.