கரோனா சிகிச்சை மையத்துக்கு உதவிகள் வழங்கிய எம்எல்ஏக்கள்

சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை
கரோனா சிகிச்சை மையத்துக்கு உதவிகள் வழங்கிய எம்எல்ஏக்கள்

சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை எம்எல்ஏக்கள் ஏ.அருண்மொழித்தேவன் (புவனகிரி), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு உதவிகளை வழங்கினா்.

அப்போது, அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை வட்டார மருத்துவ அலுவலா் அமுதா பெருமாளிடம் கேட்டறிந்தனா். மேலும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்திடவும் மருத்துவரிடம் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

அப்போது, அங்கு உள்நோயாளிகளாக சோ்க்கப்பட்டவா்களுக்கு ஹாா்லிக்ஸ், பழங்கள், பிஸ்கட், ரொட்டி, பேரிச்சம்பழம், குடிநீா், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்களை எம்எல்ஏக்கள் ஏ.அருண்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் ஆகியோா் வட்டார மருத்துவ அலுவலா் அமுதாபெருமாளிடம் வழங்கினா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com