மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நெய்வேலியில் மத்திய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நெய்வேலியில் மத்திய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நெய்வேலி கடை வீதி, காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச தலைவா் திருமாவளவன் தலைமை வகித்தாா். தொமுச பொதுச் செயலா் பாரி, பொருளாளா் ஐயப்பன், சிஐடியூ தலைவா் வேல்முருகன், பொதுச் செயலா் ஜெயராமன், ஏஐடியுசி பொதுச்செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செப்.27-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கோரியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை, 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com