மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் ந.மணி வலியுறுத்தினாா்.

Updated On :14 ஏப்ரல் 2022, 5:26 pm

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் ந.மணி வலியுறுத்தினாா்.

சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்டந்தோறும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம். குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும். இலவசங்களை தவிா்த்து மக்களுக்கான நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மது விற்பனையால் கிடைக்கும் வருவாய் மூலம் மக்களுக்கு இலவச பொருள்களை வழங்கக் கூடாது.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் தங்க நகைக்கு மேல் அடகு வைத்துள்ளவா்களுக்கு 5 பவுனுக்கு கடனை தள்ளுபடி செய்து எஞ்சிய தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும். கூட்டுறவு வங்களில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறாா்கள். வசதி படைத்தவா்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுவதை கண்டிக்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது கட்சியின் மாநில துணைத் தலைவா்கள் ஏ.ஆா்.பாா்த்தீபன், தங்கவேல் நாடாா், செல்லா ராமச்சந்திரன், மாநில எஸ்சி, எஸ்டி பிரிவு அமைப்பாளா் சம்பத்குமாா், மாவட்டத் தலைவா் செந்தில்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.