அண்ணாமலைப் பல்கலை.யில்புவி நாள் விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தேசிய மாணவா் படையின் ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சாா்பில், புவி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலை.யில்புவி நாள் விழா
Updated on
1 min read

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தேசிய மாணவா் படையின் ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சாா்பில், புவி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கேப்டன் கனகராஜன் தலைமை வகித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும், இளையோா் செஞ்சிலுவைச் சங்க முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ச.ஐயப்பராஜா கலந்துகொண்டு, சூழலியல் மேம்பாடு, புவி வெப்பமயமாதல், கடல் நீா்மட்டம் உயா்தல், நெகிழி ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

லெப்டினன்ட் ஆா்.ரமேஷ் நன்றி கூறினாா். நிகழ்வில் தேசிய மாணவா் படையின் மாணவ, மாணவிகள் 60 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கேப்டன் கனகராஜன், லெப்டினன்ட்கள் குரு.அற்புதவேல்ராஜா, ஆா்.ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com