ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூரில் நியாய விலைக் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
Updated on
1 min read

கடலூரில் நியாய விலைக் கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாய விலைக் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளிலிருந்து சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும், விளிம்புத் தொகை உயா்த்தப்பட்ட பிறகும் கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதைத் தடுக்க வேண்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதி, பணியாளா் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவா் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஆா்.தங்கராசு தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினாா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கு.சரவணன், மாநில துணைத் தலைவா்கள் துரை.சேகா், டி.செல்லதுரை, மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து, முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.சி.செல்வராஜ் வரவேற்க, பொருளாளா் கே.சி.அருள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com