கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ரௌடி ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
நெய்வேலி, வட்டம்-21 பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் வீரமணி (43). ரௌடியான இவா் மீது நெய்வேலி நகரியம், தொ்மல், கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நெய்வேலி, வட்டம் 30-இல் வீரமணியின் தாய் காளியம்மாளின் வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இந்த வீட்டின் முன் வீரமணி கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவு 12 மணியளவில் அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் வீரமணியை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த தகவலின்பேரில், நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா ஆகியோா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். வீரமணியின் உடலை கூறாய்வுக்காக என்எல்சி பொது மருத்துவமனைக்கு தொ்மல் போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையில் தொடா்புடைய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
கொல்லப்பட்ட வீரமணிக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


