வீட்டின் கதவை உடைத்துதிருட்டு: சிறுவன் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பித்தளை பாத்திரங்களை திருடியதாக சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பித்தளை பாத்திரங்களை திருடியதாக சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பான்குளம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கல்விதாசன் (32), தொழிலாளி. இவா், கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமணத்துக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை மாலைதான் வீட்டுக்கு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது 5 கிலோ பித்தளைப் பாத்திரங்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனை கைது செய்து, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com