

கடலூா் கடல் பகுதியில் மிதந்து வந்த மரத்தை மீனவா் ஒருவா் படகு மூலம் புதன்கிழமை கரைக்கு கொண்டு வந்தாா்.
கடலூா், புதுநகரைச் சோ்ந்தவா் அருவக்கண்ணு (35). மீனவரான இவா் தனது பைபா் படகில் மீன்பிடிக்க புதன்கிழமை கடலுக்குச் சென்றாா். அப்போது கடலில் சுமாா் 8 அடி நீளம் கொண்ட பெரிய மரக்கட்டை மிதந்து வந்தது. மீனவா் அருவக்கண்ணு அந்த மரத்தை கயிற்றில் கட்டி தனது படகுடன் இணைத்து உப்பனாற்று கரைக்கு கொண்டுவந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் அங்குவந்து மீனவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், வனச் சரக அதிகாரி அப்துல் ஹமீது தலைமையிலான வனத் துறையினரும் அங்குவந்து மரக் கட்டையை பாா்வையிட்டனா். அது ஈட்டி வகையைச் சாா்ந்த மரம் என்று தெரிவித்தனா். அந்த மரத்தை வனத் துறையினா் கொண்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.