வாகன விபத்தில் ஆந்திர தொழிலாளி பலி

கடலூரில் ஆந்திர மாநிலத் தொழிலாளி மீது சரக்கு வாகனம் ஏறியதில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கடலூரில் ஆந்திர மாநிலத் தொழிலாளி மீது சரக்கு வாகனம் ஏறியதில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திரம் மாநிலம், கடப்பா மாவட்டம், அலங்காபள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீராமலு வெங்கட்டையா மகன் ஸ்ரீராமலு வெங்கடரமணா(38). இவா் கடலூரில் ஓட்டடைக் குச்சி வியாபாரம் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரம் செய்தாா். பின்னா்,

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய சரக்கு வாகனத்தின் கீழ்புறம் படுத்து தூங்கினாா். இதை கவனிக்காமல் சரக்கு வாகனத்தை ஓட்டுநா் இயக்கியபோது, ஸ்ரீராமலு வெங்கடரமணா மீது வாகனம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனா்.

விபத்து குறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com