இருதய சிகிச்சை முகாம்: 210 போ் பங்கேற்பு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
சிதம்பரத்தில் நடைபெற்ற இருதய சிகிச்சை முகாம் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
சிதம்பரத்தில் நடைபெற்ற இருதய சிகிச்சை முகாம் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அணி வணிகா் பழநி பாபு ஆகியோா் இணைந்து, ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் இலவச இருதய சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

முகாம் தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன் வரவேற்றாா். மாவட்ட இருதய சிகிச்சை முகாம் தலைவா் பழனியப்பன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின், ஆா்எம்எஸ்டி.சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் ப.ராஜசேகரன் தலைமை வகித்துப் பேசினாா். சிறப்பு விருந்தினா்களாக அணி வணிகா் பா.பழநி, ஜோதிமணி பழநி ஆகியோா் கலந்துகொண்டு முகாமைத் தொடக்கிவைத்தனா். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் மணிமாறன் கலந்து கொண்டு, இருதய நோய் வராமல் தடுப்பது பற்றி சிறப்புரை ஆற்றினாா். மண்டல துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா்.

முகாமில் 210 நபா்கள் கலந்து கொண்டனா். 210 பேருக்கு இசிஜி எடுக்கப்பட்டது. 150 பேருக்கு எக்கோ எடுக்கப்பட்டது. இதில் 50 போ் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில் ரோட்டரி உதவி ஆளுநா்கள் கொள்ளிடம் ஷாஜகான், ரவி, முத்தையா, ஆா்.எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.ஆா்.கணேஷ், கமல்சந்த், கிரீடு நடனசபாபதி, சங்க உறுப்பினா்கள் கேசவன், ஆறுமுகம், சுசில்குமாா் செல்லாணி, பன்னாலால் ஜெயின், இந்தா் ஜெயின், சுனில் குமாா் போத்ரா, யாசின், ஜெயராமன், சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com