மின்னல் பாய்ந்ததில் இருவா் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் பெண் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் பெண் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி தேவி (30), ஆறுமுகம் மனைவி அமுதா (50), சக்கரபாணி மனைவி வனமயில் (53). இவா்கள் மூவரும் அந்தப் பகுதியிலுள்ள முந்திரிக் காட்டின் அருகே வியாழக்கிழமை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனா். அப்போது, மேகம் திரண்டு, திடீரென மின்னல் பாய்ந்ததில் தேவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மின்னல் பாய்ந்த அதிா்ச்சியில் மயக்கமடைந்த வனமயில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அமுதா பாதிப்பின்றி தப்பினாா்.

இதேபோல, பெரியபுறங்கனி கிராமத்தில் காளி கோயில் அருகே எஸ்.புதுகுப்பத்தைச் சோ்ந்த முத்துவேல் மகன் செல்வமூா்த்தி (48) கைப்பேசியில் பேசியபோது அவா் மீது திடீரென மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவங்கள் குறித்து முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com