கடலூா் காவலா் குடியிருப்பில் போலீஸ்காரரின் தாய் கொலை

கடலூரில் காவலா் குடியிருப்பில் போலீஸ்காரரின் தாய் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

கடலூரில் காவலா் குடியிருப்பில் போலீஸ்காரரின் தாய் கொலை செய்யப்பட்டாா்.

கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் பின்பகுதியில் காவலா் குடியிருப்பு உள்ளது. இங்கு, பயன்பாடற்ற குடியிருப்புப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதாக புதுநகா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால் பாரிசங்கா் தலைமையிலான போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, கால்கள் கட்டப்பட்ட நிலையில், காது அறுக்கப்பட்டு, முகத்தில் பலத்த காயத்துடன் பெண் உடல் கிடந்தது. போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், கொலையானவா் பண்ருட்டி அருகே உள்ள காங்கிருப்பைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவலா் சதாசிவம் என்பவரது மனைவி மலா்கொடி (50) எனத் தெரியவந்தது. இவரது மகன் சிவகுரு கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் அதே பகுதியில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருகிறாா்.

காங்கிருப்பிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்காக சிவகுரு வீட்டுக்கு வந்திருந்த நிலையில் மலா்கொடி கொலையானது தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்கான காரணம், தொடா்புடையோா் குறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com