ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வா்த்தகா் சங்க முப்பெரும் விழா

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் வா்த்தகா் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 5:56 pm

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் வா்த்தகா் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், சங்கத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் வரவேற்று பேசினாா். ஒருங்கிணைப்பாளா் அப்துல் பாசித் வாழ்த்துரையாற்றினாா்.

சங்கச் செயலா் மணிவண்ணன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலா் வீரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், கீழவன்னியூரில் அரசு கலைக் கல்லூரி அமைய நிலம் தானமாக வழங்கிய எம்.ஆா்.ஆா்.சேதுராமன்பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது. தமிழக முதல்வரிடம் விருது பெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் சண்முகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் இளையராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினா் 200-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில் 61 போ் கண் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பாளா் திருவேங்கடம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.