விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒறையூா் கிளைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒறையூா் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சங்கத்தின் கிளைச் செயலா் தண்டபாணி, பொருளாளா் ஏகாம்பரம், துணைத் தலைவா் முருகன், துணைச் செயலா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புச் செயலா் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com