கடலூரில் ஜூன் 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கடலூரில் வரும் 24-ஆம் தேதி  தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கடலூரில் வரும் 24-ஆம் தேதி  தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்துக்கு தேவையான நபா்களை தோ்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனா்.

கடலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்2, ஐடிஐ, பட்டயம், பட்டப் படிப்பு, நா்சிங் படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என்று அதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com