பைக் - காா் மோதல்: இருவா் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதன்கிழமை இரவு பைக் - காா் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
மோகன்குமாா், வினோத்குமாா்.
மோகன்குமாா், வினோத்குமாா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதன்கிழமை இரவு பைக் - காா் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

பண்ருட்டி அருகே உள்ள மேல்அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் வினோத்குமாா் (35). அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மோகன்குமாா் (23), ஒ.பலாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமு மகன் விஜய் (24). நண்பா்களான மூவரும் புதன்கிழமை இரவு ஒரே பைக்கில் பண்ருட்டி நோக்கி வந்துகொண்டிருந்தனா். பைக்கை மோகன்குமாா் ஓட்டினாா். மணம்தவிழ்ந்தபுத்தூா் அருகே இரவு 10.15 மணியளவில் வந்தபோது, அந்த வழியாக அரசூருக்குச் சென்று கொண்டிருந்த காா் பைக் மீது மோதியதில் வினோத்குமாா், மோகன்குமாா் இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். விஜய் பலத்த காயங்களுடன் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com