கடலூரில் மினி மாரத்தான் போட்டி

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு கடலூரில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் மினி மாரத்தான் போட்டியை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம். உடன் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா உள்ளிட்டோா்.
கடலூரில் மினி மாரத்தான் போட்டியை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம். உடன் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா உள்ளிட்டோா்.
Updated on
1 min read

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு கடலூரில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தச் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு கடலூரில் செப்டம்பா் 29, 30, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி, கடலூரில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மஞ்சக்குப்பம் நகர அரங்கிலிருந்து இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 10 பேருக்கு நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.மல்லிகா தலைமை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பா.சிவா, வழக்குரைஞா் எம்.சிவமணி, மாதா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் கிரிஜா, குடியிருப்போா் சங்கத்தின் பொதுச் செயலா் மு.மருதவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாநாட்டு வரவேற்பு குழுச் செயலா் பி.தேன்மொழி வரவேற்றாா். குடியிருப்போா் சங்கத் தலைவா் பி.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com