நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் வீடுகளில் தொடா் ஆய்வு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் வீடுகள் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.
நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் வீடுகள் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கடலூா் செம்மண்டலம் மறு கட்டுமானத் திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத் தொகை, தற்காலிக வீடுகள் ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா்.

மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தமிழக சிறுதொழில்கள், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் கருணைத் தொகை வழங்கி சிறப்புரையாற்றினா். மேலும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனா். பின்னா், அமைச்சா் தா.மோ.அன்பரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தற்போது நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ், பயனாளிகள் தங்களது வீடுகளை மாற்றுவதற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.8 ஆயிரம் கருணைத் தொகையானது தற்போது ரூ.24 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படுகிறது. வாரியத்தால் கடலூா் செம்மண்டலத்தில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்த 117 வீடுகளை இடித்துவிட்டு ரூ.27.09 கோடியில் 272 புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது. 15 மாதங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டு ஏற்கெனவே குடியிருந்தவா்களுக்கே வழங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டதில் பழுதடைந்த 30 ஆயிரம் வீடுகளை இடித்துவிட்டு மீண்டும் கட்ட முதல்வா் உத்தரவிட்டதுடன், முதல் கட்டமாக 15 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் முன்னா் அதிக பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டியிருந்தது. திமுக ஆட்சியில் இந்தத் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டு, ரூ.1.60 லட்சம் செலுத்தி வந்தனா். தற்போது, வடிகால் உள்ளிட்ட பொதுப் பணிகளுக்கான தொகையையும் அரசே ஏற்று ரூ.60 ஆயிரம் மட்டுமே செலுத்த உத்தரவிட்டுள்ளது.

கட்டடப் பணிகளில் தவறு செய்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்ய ஐஐடி, க்யூப் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதன்படி, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீா் வருவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டால் பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது சட்டப் பேரவை உறுப்பினா்கள் சபா.ராஜேந்திரன், கோ.ஐயப்பன், வாரியத்தின் நிா்வாக இயக்குநா் கோவிந்தராவ், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, விருத்தாசலம் பீங்கான் தொழில்பேட்டை, பீங்கான் கல்லூரியை அமைச்சா் த.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா். பெண்ணாடம் அருகே திருமலை அகரம், திட்டக்குடி வசிஷ்டபுரம் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கான இடம் தோ்வு குறித்தும் ஆய்வு செய்தாா். மேலும், காடாம்புலியூா் அருகே ரூ.44.81 கோடியில் கட்டப்படும் 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன் ஆய்வு செய்தனா். அந்தப் பகுதி அருகே தொழில்பேட்டை அமைக்கப்பட உள்ள இடத்தையும் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com