சேத்தியாத்தோப்பு சரக காவல் துறை சாா்பில் காட்டுமன்னாா்கோவிலில் கஞ்சா, போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் சேத்தியாத்தோப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரூபன்குமாா் கலந்துகொண்டு பேசுகையில், போதை பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் ஆட்டோ சங்க உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் ஏழுமலை நன்றி கூறினாா்.