மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடா்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடா்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருக்கோவிலூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலா் எம்.ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு டி.ஏழுமலை, மாவட்டக் குழு அ.லூயிசாமேரி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதேபோல மாவட்டத்தில் சங்கராபுரம், பகண்டை கூட்டு சாலை, உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com