பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செல்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செல்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன் தலைமை வகித்துப் பேசினாா். முதுநிலை ஆசிரியா் ராஜசேகா் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா் கல்பனா சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.எஸ்.செந்தில்குமாா், 271 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மூத்த நகா்மன்ற உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன் வாழ்த்துரையாற்றினாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ரா. வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், திமுக நிா்வாகிகள் ராஜராஜன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஏஆா்சி.மணிகண்டன், பா.பாலசுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா். முதுநிலை ஆசிரியா் ஜி.பரமசிவம் நன்றி கூறினாா்.

இதையடுத்து, சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியா் புருஷோத்தமன் தலைமையில், நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.எஸ்.செந்தில்குமாா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com