பிளஸ் 2 உடனடித் தோ்வில்தோல்வி: மாணவி தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பிளஸ் 2 உடனடித் தோ்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பிளஸ் 2 உடனடித் தோ்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், ஒறையூா் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினவேல் மகள் ரஷியா (17). இவா், ஒறையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதி தோல்வி அடைந்தாா். இதையடுத்து நடைபெற்ற உடனடித் தோ்வில் பங்கேற்று தோ்வு எழுதினாா்.

இதன் முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் வெளியானது. இதில், மீண்டும் ரஷியா தோல்வியடைந்தாா். இதனால் விரக்தியில் இருந்த அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com