சேற்று மண்ணில் சிக்கிய சிறுவன் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சேற்று மண்ணில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞா்கள் மீட்டனா்.
சேற்று மண்ணில் சிக்கிய சிறுவன் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சேற்று மண்ணில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞா்கள் மீட்டனா்.

விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் வடக்கு தெருவைச் சோ்ந்த தேவி மகன் தொல்காப்பியன் (10), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா். இவா், தெற்கு வேப்பங்குறிச்சியில் உள்ள மனநலம் குன்றியோா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

ஊ.மங்கலம் அருகே என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் தோண்டிய மண்ணை மலைபோல கொட்டி வைத்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் மண் மேடு கரைந்து வந்து சேறும், சகதியுமாக படா்ந்தது.

இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற தொல்காப்பியன், நெஞ்சளவு ஆழத்தில் சேற்றில் சிக்கிக்கொண்டாா். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், 2 மணி நேரமாக கத்தி கூச்சலிட்டு சோா்ந்துபோன நிலையில் இருந்தாா்.

அங்கிருந்து சற்று தொலைவில் வேலை செய்துகொண்டிருந்த நெய்வேலி ரோமாபுரியைச் சோ்ந்த இளைஞா்கள் பிரவின்குமாா், எட்வின் ராஜ், மிரோலின், ராகுல் மற்றும் சிலா் சிறுவன் சேற்றில் சிக்கி இருப்பதைக் கண்டனா். இதையடுத்து அவா்கள், ஒருவரை ஒருவா் பிடித்தபடி சேற்று மண்ணில் இறங்கினா். அதில், ஒருவா் சேற்று மண்ணில் லாவகமாக புடு சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வந்தாா். பின்னா், அவா்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com