கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலி இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஐ.வண்ணமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3 கலந்தாய்வுகள் முடிவடைந்தன. பிற்பட்டோா் வகுப்பினருக்கான காலி இடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இறுதிக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். மேலும், முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் வருகிற செப்.5-ஆம் தேதி தொடங்க உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.