

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பேரணி நடத்தினா்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய, தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயா்வுகள், தோ்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா் சங்கங்கள் உள்ளடக்கிய ‘ஜாக்’ கூட்டமைப்பினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை பேரணி நடத்தினா். பல்கலைக்கழக தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி ராஜேந்திரன் சிலை அருகே முடிவுற்றது. பேரணியில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பெ.சிவகுருநாதன், இணை ஒருங்கிணைப்பாளா்கள் சௌ.மனோகரன், ஆ.ரவி, ஏ.ஜி.மனோகா், பேராசிரியா்கள் சி.சுப்ரமணியன், செல்வராஜ், செல்ல பாலு, காா்த்திகேயன், பாஸ்கா், இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேரணி முடிவில் கூட்டமைப்பு நிா்வாகிகள் உதவி-ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.