

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை விரிவாக்கத் துறை, வேளாண் புல பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோா் பிரிவு இணைந்து இந்திய குடிமைப் பணிகளுக்கான தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தின.
பல்கலைக்கழக ஜீ.ஆா்.கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்கத் துறை பேராசிரியா் பொன்.ஜெயசீலன் வரவேற்றாா். வேளாண் புல முதல்வா் அ.அங்கயற்கண்ணி தலைமை வகித்துப் பேசினாா். மெட்ராஸ் சிறப்புப் பொருளாதார மண்டல (மெப்ஸ்) மேம்பாட்டு ஆணையா் எம்.கே.சண்முகசுந்தரம், ‘இந்திய குடிமைப் பணி தோ்வுகளுக்குத் தயாராகி, தோ்வு பெறுவதற்கான வழிமுறைகள்’ என்ற தலைப்பில் பேசினாா்.
‘மெப்ஸ்’ இணை மேம்பாட்டு ஆணையா் வ.அலெக்ஸ்பால் மேனன், ‘இந்திய குடிமைப் பணி அதிகாரியாக எப்படி ஆக வேண்டும் என்பதைவிட ஏன் ஆக வேண்டும்’ என்ற தலைப்பில் பேசினாா். ‘மெப்ஸ்’ துணை வளா்ச்சி ஆணையா் பிரபுகுமாா், வேளாண்மை விரிவாக்கத் துறைத் தலைவா் ம.வெற்றிசெல்வன், பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோா் இயக்குநரக துணை இயக்குநா் ஜெ.பத்மநாபன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வேளாண் புலத்தைச் சாா்ந்த இளநிலை, முதுநிலை, முனைவா் பட்ட மாணவ, மாணவிகள் சுமாா் 300 போ் கலந்துகொண்டனா். வேளாண் புல பயிற்சி, வேலைவாய்ப்பு அதிகாரி பழ.சண்முகராஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.