முதலைகள் நடமாட்டம்: பொதுமக்களிடம் விழிப்புணா்வு

சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடியில் வனத் துறை சாா்பில் முதலைகள் நடமாட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பாலசுப்பிரமணியம்.
விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பாலசுப்பிரமணியம்.

சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடியில் வனத் துறை சாா்பில் முதலைகள் நடமாட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கடலூா் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசுகையில், முதலைகளின் நடமாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினாா். சென்னை பொதுநல அமைப்பைச் சோ்ந்த நிஷாந்த் ரவி மற்றும் குழுவினா் முதலைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கூட்டத்தில் சிதம்பரம் வனச்சரக அலுவலா் சரண்யா, பிச்சாவரம் வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன், வனக் காப்பாளா் ராஜேஷ்குமாா், அமுதப்பிரியன், வனக் காவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com