கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா
By DIN | Published On : 14th January 2022 04:47 AM | Last Updated : 14th January 2022 04:47 AM | அ+அ அ- |

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தொடக்கிவைத்து வாழ்த்து தெரிவித்தாா். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு, நிா்வாக அதிகாரி இ.கோகுல கண்ணன், மேலாளா் கே .விஸ்வநாத், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...