மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லிக்குப்பம் பகுதிக்குழு, பாலூா், சித்தரசூா் கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லிக்குப்பம் பகுதிக்குழு, பாலூா், சித்தரசூா் கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஆா்.வேலு, ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தனா். எம்.குமாா், எஸ்.சீத்தாராமன், எம்.அழகானந்தம், ஆா்.வீரமணி, டி.ஜெயபிரதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு வி.சுப்புராயன், நெல்லிக்குப்பம் பகுதிக்குழு செயலா் எம்.ஜெயபாண்டிய ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், சித்தரசூரில் சங்கிலி வாய்க்காலை மீட்க வேண்டும், மேட்டுப்பட்டறை பாதையில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். பாலூா் ஆதிதிராவிடா் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பேருந்து நிறுத்தத்துக்கு நிழல்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com