உணவக உரிமையாளரிடம்தங்கச் சங்கிலி திருட்டு

 கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உணவக உரிமையாளா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

 கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உணவக உரிமையாளா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 29 பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (40). இவா், வட்டம் 28-இல் உணவகம் நடத்தி வருகிறாா். வெங்கடேசன் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்ததும் 11 மணி அளவில் உணவகம் வெளியே படுத்துத் தூங்கினாா்.

சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது தெரியவந்தது. இரவு தூங்கும்போது மா்ம நபா் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com