பாஜக மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

பாஜக கடலூா் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

பாஜக கடலூா் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஜி.மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கே.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலா்கள் சுரேஷ் பிச்சைப்பிள்ளை, ஆா்.மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் எஸ்.ஜி.சூா்யா பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், கடலூா் மாநகர பேருந்து நிலையத்தை கடலூரிலேயே அமைக்க வேண்டும். கடலூரில் பெருகி வரும் போதைப்பொருள்கள் விற்பனை, மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். நிலம் கொடுத்தோறுக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். கடலூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com