முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக சீனிவாச சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பதிவாளா் கே.சீத்தாராமன் உறுதிமொழியை வாசிக்க தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் சிங்காரவேலன், மக்கள்-தொடா்பு அலுவலா் ஜி.ரத்தினசம்பத் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டு, முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.