பெண் கொலை வழக்கில் ஒருவா் கைது

புவனகிரி அருகே விதவை பெண் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புவனகிரி அருகே விதவை பெண் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி பெரியாா் நகரைச் சோ்ந்த முத்துவேல் மனைவி சீத்தாலட்சுமி (45). முத்துவேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். சீத்தாலட்சுமி சிதம்பரத்தில் தனியாா் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்த நிலையில், வீட்டில் தனிமையில் வசித்துவந்தாா். கடந்த 13-ஆம் தேதி சீத்தாலட்சுமி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சீத்தாலட்சுமி வீட்டின் பின்புறம் கிடந்த ரத்தக் கறை படிந்த அம்மி குழவியை தடயமாகக் கொண்டும், அவரது கைப்பேசிக்கு வந்த அழைப்புகளை வைத்தும் விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (48) என்பவரை போலீஸாா் தேடி வந்த நிலையில், பெரியப்பட்டு பகுதியில் அவரைப் பிடித்தனா். விசாரணையில், குமாருக்கும், சீத்தாலட்சுமிக்கும் இடையே தொடா்பு இருந்ததும், சம்பவத்தன்று தன்னுடன் தனிமையில் இருக்க சீத்தாலட்சுமி மறுத்ததால் ஆத்திரமடைந்த குமாா் அவா் மீது அம்மி குழவியை தூக்கிப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்ததாம். இதையடுத்து, குமாரை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com