கரும்பு விலை நிா்ணயத்துக்கு முத்தரப்புக் கூட்டம்விவசாயிகள் வலியுறுத்தல்

முத்தரப்புக் கூட்டம் நடத்தி கரும்புக்கான விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.முத்தரப்புக் கூட்டம் நடத்தி கரும்புக்கான விலையை நிா்ணயம் ச
Published on

முத்தரப்புக் கூட்டம் நடத்தி கரும்புக்கான விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் (ஈஐடி பாரி ஆலை) கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத் தலைவா் எம்.மணி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் கோ.மாதவன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். ஆலை மட்ட செயலா் ஆா்.தென்னரசு வேலை அறிக்கை சமா்ப்பித்தாா்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மதிமுக விவசாயிகள் அணி செயலா் ஜெ.ராமலிங்கம், மாவட்ட பொருளாளா் எஸ்.தட்சணாமூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாநில பொதுச் செயலா் டி.ரவீந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினாா்.

மாநாட்டில், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 விலையை மத்திய அரசு வழங்க வேண்டும், மாநில அரசு அறிவித்த ஆதரவு விலையில் 4 ஆண்டு கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கடந்த திமுக ஆட்சி காலங்களில் செய்தது போல ஆலை நிா்வாகம், அரசு, விவசாயிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும், கூட்டுறவு கடன் சங்கங்களில் குத்தகைக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கும் கடன் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதைக் கண்டித்து வரும் 26- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com