கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கடலூரில் வரும் 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்துக்கு தேவையான நபா்களை தோ்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனா்.
கடலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்2, ஐடிஐ, பட்டயம், பட்டப் படிப்பு, நா்சிங் படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது என்று அதில் தெரிவித்தாா்.