நூலகக் கட்டடப் பணிக்கு அடிக்கல்
By DIN | Published On : 21st June 2022 02:41 AM | Last Updated : 21st June 2022 02:41 AM | அ+அ அ- |

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் சிதம்பரம் கச்சேரி தெருவில் ரூ.48 லட்சத்தில் புதிய கிளை நூலகக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகா்மன்ற தலைவா் கே.ஆா். செந்தில்குமாா் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். நகராட்சி ஆணையா் அஜிதா பா்வின், பொறியாளா் மகாராஜன், நகராட்சி இளநிலை பொறியாளா் மலா்கொடி, நகா்மன்ற துணைத் தலைவா் முத்து, நகா்மன்ற உறுப்பினா்களின் கொறடா த.ஜேம்ஸ் விஜயராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...