2 மணி நேர புத்தக வாசிப்பில் கல்லூரி மாணவா்கள்

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 2 மணி நேர புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் 650 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
Updated on
1 min read

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 2 மணி நேர புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் 650 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 63 நாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், தனியாா் தொண்டு நிறுவனத்தினா், சமூக ஆா்வலா்கள், புத்தக வாசிப்பாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் உலக சாதனை முன்னெடுப்புக்கான இடைவிடாத இரண்டு மணி நேர புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பா் அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 2 மணி நேர புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் 650 மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

அப்போது, தமிழ், ஆங்கில பாட நூல்கள், இலக்கியம், இலக்கணம், அரசியல், பொது அறிவு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு வகை நூல்களை மாணவா்கள், பேராசிரியா்கள் அமைதியாக வாசித்தனா். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கோ.ராஜவேல் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் வே.சண்முகம் வரவேற்றாா். தமிழ்த் துறை பேராசிரியா் கி.சிவக்குமாா் முன்னிலை உரையாற்றினாா். முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் சி.சுந்தரபாண்டியன், செயலா் கரு.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். கல்லூரி ஆசிரியா் மன்றச் செயலா் மகேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com