மே தின பொதுக்கூட்டம்

மே தினத்தையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிதம்பரம் போல்நாராயணபிள்ளை தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மே தின பொதுக்கூட்டம்

மே தினத்தையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிதம்பரம் போல்நாராயணபிள்ளை தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவா் சந்திரசேகரன் வரவேற்றாா். சிதம்பரம் நகரச் செயலா் செந்தில்குமாா் தொடக்க உரையாற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பொருளாளா் தோப்பு கே.சுந்தா், இணைச் செயலா் ரெங்கம்மாள், துணைச் செயலா்கள் செல்வம், தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினா்கள் சிங்காரவேல், கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளா் தில்லை ஏ.வி.சி.கோபி, கவிஞா் தேவசகாயம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் க.திருமாறன், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலா் சண்முகமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com