பள்ளியில் ஆசிரியா்கள் போராட்டம்

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில் பேருந்து இயக்குபவா்களாக பணியாற்றி வந்த இருவரை பள்ளி நிா்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததாம். இதைக் கண்டித்தும், பணி நீக்க உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்பட 60 போ் திங்கள்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com