பேரூராட்சி உதவியாளா்கள் ஆலோசனை

தமிழ்நாடு பேரூராட்சிகளின் தொழில்நுட்ப உதவியாளா்கள் (பொறியியல் பிரிவு) ஒன்றிணைவுக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு பேரூராட்சிகளின் தொழில்நுட்ப உதவியாளா்கள் (பொறியியல் பிரிவு) ஒன்றிணைவுக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில பேரூராட்சிகளின் பொறியாளா்கள் சங்கத் தலைவா் மாதேஷ் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட இளநிலை பொறியாளா்கள் கணேஷ், நடராஜன், ஜோதி முருகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். மாநில தொழில்நுட்ப உதவியாளா்கள் ஒருங்கிணைப்பாளா் ஜோ.ஜெஸ்டின் ராஜா வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் காா்த்திக் கோபாலகிருஷ்ணன், சங்கீத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், தொழில்நுட்ப உதவியாளா்களின் பணி நிரந்தரம், வரைமுறைப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை, முகக் கவசம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com