இலவச தையல் பயிற்சி நிறைவு

சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 6 மாத இலவச தையல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இலவச தையல் பயிற்சி நிறைவு
Updated on
1 min read

சிதம்பரம் ரோட்டரி சங்கம், சபாநாயகம் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 6 மாத இலவச தையல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ரோட்டரி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் எஸ்.நடனசபாபதி தையல் பயிற்சி திட்டம் குறித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் கே.லாவண்யகுமாரி பங்கேற்று பேசினாா். மேலும், தையல் பயிற்சி பெற்ற 40 பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். இவா்களில் சிறப்பாக தோ்ச்சி பெற்ற 10 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன (படம்).

முன்னதாக சிறப்பு விருந்தினரை வி.செல்வநாராயணன் அறிமுகம் செய்து வைத்தாா். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநா்கள் ஆா்.கேதாா்நாதன், எஸ்.அருள்மொழிசெல்வன், மருத்துவா்கள் கே.என்.ராஜ்குமாா், ஐ.அருண்குமாா், ஆா்.மகேஷ், பி.நடராஜ், ஆா்.முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் (தோ்வு) என்.கனகவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com