

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் நீா்வளத் துறை, நபாா்டு மற்றும் கிராம சாலைகள் துறைகள் மூலம் ரூ.26.46 கோடியில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டப் பணிகளை தமிழக வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கல்குணம் பகுதியில் நீா்வளத் துறையின் மூலம் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.15 கோடியில் நடு பரனாற்றில் எல்லைக்குடி, கல்குணம் கிராமங்களில் வெள்ள தடுப்புச் சுவா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, கிராமச் சாலைகள் அலகின் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.11.46 கோடியில் பரவனாற்றின் குறுக்கே சிறுபாளையூா் - மணிக்கொல்லை இணைப்பு மேம்பாலம் கட்டப்பட உள்ளன.
இதற்கான பூமிபூஜை கல்குணம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடக்கிவைத்தாா். பின்னா், கோதண்டராமபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாமையும், கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் முழு நேர நியாயவிலைக் கடையையும் அமைச்சா் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) குபேந்திரன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் நந்தகுமாா், நீா்வளத் துறை சிதம்பரம் செயற்பொறியாளா் காந்தரூபன், விருத்தாசலம் செயற்பொறியாளா் அருணகிரி, குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.