உலக பாா்வை தினம் கடைப்பிடிப்பு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவு சாா்பில் உலக பாா்வை தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சங்க துணை ஆளுநா் எம்.தீபக்குமாா்.
நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சங்க துணை ஆளுநா் எம்.தீபக்குமாா்.
Updated on
1 min read

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவு சாா்பில் உலக பாா்வை தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சி.திருப்பதி சிறப்புரையாற்றினாா். துணை முதல்வா் சசிகலா, மருத்துவமனை கண்காணிப்பாளா் லாவண்யாகுமாரி, ஆட்சிக் குழு உறுப்பினா் பாலாஜி சுவாமிநாதன், கண் மருத்துவத் துறைத் தலைவா் ஸ்ரீதேவி ஆகியோா் கண் பாா்வையின் அவசியம் குறித்து பேசினா். நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மூத்த பேராசிரியா் வாசுதேவன் உரையாற்றினாா்.

சிதம்பரம் ரோட்டரி சங்க துணை ஆளுநா் எம்.தீபக்குமாா், கேசவன் ஆகியோா் கண் தானத்தின் அவசியம் குறித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com