கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலியல் தொல்லையால் அரசுப் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அந்தப் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள விநாயகபுரம் கொழை கிராமத்தைச் சோ்ந்தவா் கே.தமிழ்ச்செல்வன் (55). அந்தப் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் சம்பவத்தன்று அதே பள்ளியில் பயிலும் 16 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இந்த நிலையில், அந்த மாணவி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு ஆண்டிமடத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியா் தமிழ்ச்செல்வனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.