தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரில் புதன்கிழமை 10 மில்லி மீட்டா் மழை பதிவானது.
கடலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது. தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 10.2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):
குறிஞ்சிப்பாடி 9, புவனகிரி, பண்ருட்டி தலா 7, கொத்தவாச்சேரி, வடக்குத்து தலா 6, குப்பநத்தம் 5.8, பரங்கிப்பேட்டை 4.2, விருத்தாசலம், பெலாந்துறை, லால்பேட்டை தலா 3, ஸ்ரீமுஷ்ணம் 2.3, காட்டுமன்னாா்கோவில், கீழச்செருவாய் தலா ஒரு மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.