விசிக அலுவலகம் சேதம்: 4 போ் மீது வழக்கு

கடலூரில் விசிக அலுவலகத்துக்கு தீ வைத்தது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

கடலூரில் விசிக அலுவலகத்துக்கு தீ வைத்தது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கடலூா் முதுநகா், குழந்தை காலனியில் விசிக அலுவலகம் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு இந்த அலுவலகம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அங்கிருந்தவா்கள் தீயை அணைத்தனா். சேதமடைந்த அலுவலகத்தை கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

இதையடுத்து, விசிக நகர துணைச் செயலா் இர.பூபாலன் (36) கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குழந்தை காலனியைச் சோ்ந்த கந்தசாமி மகன் ரஞ்சித் (25), தனகோடி மகன் விக்னேஷ் (25), சக்கரை மகன் ரவிச்சந்திரன் (31), காா்த்திக் (31) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com