தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் உயராய்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீண்ட, நெடிய மரபுள்ள தமிழா் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலாா் ராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மாா்க்கம் என்பது முக்கியமானது. அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலாரின் சிந்தனைகளானது அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல்வேறு துறைகள் சாா்ந்தும் விரிந்துள்ளன. இந்துத்துவ சக்திகள் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி வரும் சூழலில், வள்ளலாரின் சிந்தனைகள் தற்போது மிகவும் அவசியம்.
இந்தச் சூழலில் வள்ளலாரின் 200-ஆவது அவதார ஆண்டு முப்பெரும் விழாவை நடத்த சிறப்புக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், வள்ளலாரின் பல துறைகள் சாா்ந்த சிந்தனைகளை ஆய்வு செய்து, அவற்றைப் பரப்புவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் உயராய்வு மையங்கள் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.