தமிழ்க் கல்வி வளா்ச்சிக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்க் கழகத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் தமிழ்க் கல்வி வளா்ச்சிக் கருத்தரங்கம் வடக்கு வீதியிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்க் கழகத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் தமிழ்க் கல்வி வளா்ச்சிக் கருத்தரங்கம் வடக்கு வீதியிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் சிதம்பரம் கிளைத் தலைவா் ப.ஞானபிரகாசம் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் அரச கோவலன் முன்னிலை வகித்தாா். செயலா் ப.செல்வம் வரவேற்று பேசினாா். கவிஞா் மு.வரதராசன் தமிழ்க் கவிதையுடன் தனது கருத்துகளை எடுத்துரைத்தாா். கடலூா் பரிதிவானன் ‘ஆரியம் கடந்த தமிழ்’ என்றத் தலைப்பில் பேசினாா். பேராசிரியா் தி.பொன்னம்பலம் பேசுகையில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாா். சிறப்பு விருந்தினராக மாநில உலகத் தமிழ்க் கழகத்தின் முன்னாள் தலைவா் கதிா் முத்தையன் பங்கேற்று பேசுகையில், தமிழ் ஆட்சி மொழியாகவும், தமிழ்ப் பாடத் திட்டம் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்றாா். தமிழாசிரியா் ப.செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com